search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோளம் அறுவடை பணி"

    கிருஷ்ணராயபுரம் பகுதியில் சோளம் அறுவடை செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட கட்டளை, மேலகட்டளை, ரங்கநாதபுரம், மணவாசி, வீரராக்கியம், மேலமாயனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் காவிரி ஆற்றுப்பாசன திட்டம் மற்றும் தங்களுடைய நிலங்களில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு பல ஏக்கர் பரப்பளவில் சிவப்பு சோளத்தை பயிரிட்டுள்ளனர். 

    சித்திரை மாதத்தில் பயிர் செய்த இந்த சோளப்பயிர் தற்போது நன்கு வளர்ந்து கதிர்கள் முற்றிய நிலையில் அவற்றை அறுவடை செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இந்த பகுதிக்கு தேவைப்படும் விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளூரில் கிடைக்காமையால் மாவட்டத்தின் தென்பகுதி ஒன்றியமான கடவூர் ஒன்றியத்தின் தரகம்பட்டி, வரவணை, சுண்டுகுழிப்பட்டி, தெற்கு பிச்சம்பட்டி, கள்ளபொம்மன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டை, சீரங்கபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களை வேன்கள் மூலம் அழைத்து வந்து அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும் பல விவசாய கூலி தொழிலாளிகள் பிற பகுதியில் இருந்தும் பஸ்கள் மூலம் இந்த பகுதிக்கு வந்து கூலிக்கு அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையில் இளம் வயது பெண்கள் விவசாய கூலிகளாக வேலைக்கு செல்லாமல் கரூரில் உள்ள பல தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அந்நிறுவன பஸ்களின் மூலம் சென்று விடுவதாலும், ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் 100 நாள் வேலைக்கு சென்று விடுவதாலும் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். இதை கருத்தில் கொண்டு விவசாய பயிர்களின் அறுவடை காலங்களில் 100 நாள் பணியாளர்களை விவசாயிகளின் அறுவடை பணிக்கு பயன்
    படுத்தும் வகையில் அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×